பழங்கள் – பயன்கள்

Published in: on திசெம்பர் 29, 2019 at 2:27 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

தர்பார் டீசர் – ஒரு பார்வை

கபாலி, காலா, பேட்ட வரிசையில் இப்ப தர்பார் டீசர். வழக்கமான பீஜியம் வித் டமால் டுமீல் ஸவுண்ட்ஸ். தலைவர் என்ட்ரோ…. ஸாங் பை எஸ்பிபி ஹூப்பர். பன்ச் டயலாக்ஸ் பழசுதான். ஆனா அத தலைவர் ஸ்டைலா சொலுலம்போது.. ஹாஸம். வில்லன் அசலோ? என்னா முரட்டுத்தனம். நயன்தாரா நச்…

டீசர வச்சி முருகதாஸ் கதைய கணிக்க முடியாது.. மனுஷன் எங்க எங்க ட்விஸ்ட் வச்சிருக்காரோ..

மொத்தத்தில் டீசர் சும்மா கிழி.. கிழி..

Published in: on திசெம்பர் 17, 2019 at 6:44 முப  தர்பார் டீசர் – ஒரு பார்வை அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது  

உன் கண் உன்னை……

0000da7f_medium

படத்தை கிளிக்கி ரயில் நகரும் திசையை சற்று நேரம் உற்று நோக்குங்கள். இப்போது ரயில் வந்து கொண்டிருக்கிறதா அல்லது போய்கொண்டிருக்கிறதா?

உங்கள் கண் உங்களை ஏமாற்றினால்…

Published in: on செப்ரெம்பர் 20, 2013 at 8:10 முப  Comments (1)  

கும்முக்கி – ஒரு காகப்பார்வை

A-still-from-Kumki

நரி காகத்தினை பார்த்து ‘காக்கா… காக்கா.. (கக்கா.. கக்கா என்று படித்து வைக்காதீர்கள்) நீ ரொம்ப அழகா இருக்கே… ஒரு பாட்டு பாடேன்’ என்றது. காக்கையும் நரியின் புகழ்ச்சியில் மயங்கி ‘கா.. கா..’ என்று பாட துவங்கியது.  அப்போது காகத்தின் வாயிலிருந்த வடை நழுவியது.

இந்த ஸீன் இங்கே நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அங்கே பாட்டி தான் சுடுகின்ற வடை கருகிக்கொண்டிருப்பது கூட தெரியாமல் வடை சுட்டுக்கொண்டிந்தாள்.  

ஜிம்மி ஜிப் கேமரா கோணத்துல கீழே வர்ர இந்த ஸீனை நினைச்சிப்பருங்க…

மரத்தின் உச்சிக்கிளையில்  காகம் பாட்டுப்பாடிக்கொண்டிருக்கிறது.. (அங்கிருந்து கேமரா ஸ்ட்ராட்)

காகம் வாயிலிருந்து நழுவிய வடை மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறது….  (கேமரா வடை கூடவே ட்ராவல்)

நரியும் தன்னை நோக்கி கீழே விழுந்துகொண்டிருக்கும் வடையை மேலே நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. (கேமரா ஃபாலிங்)

‘தொப்’ , ‘தொபுகடீர்’ , ‘பட்’, ‘பட்டென்று’, ‘டம்’, ‘டமால்’…..என்று உங்களுக்கு பிடித்த ஒரு சவுண்டை செலக்ட் செய்து கொள்க.

ஒரு சரியான ஷணத்தில் மேலிருந்து கீழே விழுந்த வடையானது நரியின் உச்சந்தலையில் விழ (செலக்டட் சவுண்ட்…) நரியும் பட்டென்று சாய்ந்துவிட்டது.  வடை விழுந்ததால் நரியின் தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் குபு குபுவென கசிய, நரியின் தலையைச்சுற்றி ரத்தம் தரையில் படர்ந்துகொண்டிருந்தது.

இதை பார்த்த காகமோ சட்டென்று மரத்திலிருந்து கீழிறங்கி(?) வந்து நரியினை தொட்டுப்பார்க்க நரி கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருப்பதை அது உணர்ந்தது.

இந்த இழவு தன்னால் தானே நிகழ்ந்தது என்று எண்ணி கலங்கி கண்ணீர் விட்டு, காகம் கனத்து அழுதது.

அழுகை அடங்கியதும் தான் பாட்டியிடமிருந்து சுட்ட வடைக்காக, வடை சுட்ட பாட்டியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று பாட்டியிடம் சென்று…. 

‘ ஐயகோ  என்ன கொடுமை’….  அங்கே பாட்டி கரு(க்)கியிருந்தாள்.

 

‘திம்’…. யாரோ ஓங்கி என் முதுகில் மிதித்ததை என்னால் உணர முடிந்தது…

‘வீணாப்போனவனே… போனாப்போவுதுன்னு காணமப்போயிருந்த உன்ன கூட்டியாந்து இங்க உட்டா… நீ கும்கி படத்தையே கலாய்க்கிறியா…  இப்ப உன்ன குமுக்கி எடுக்கிறேன் பாரு……’

 

Published in: on திசெம்பர் 28, 2012 at 5:20 முப  Comments (1)  

வல்லவனுக்கு…

Published in: on மார்ச் 22, 2011 at 5:13 முப  Comments (4)  

புரியாத புதிர்…

அற்புதம்…   கீழே உள்ள சுட்டியை சுட்டுங்கள்…

http://www.learnenglish.org.uk/games/magic-gopher-central.swf

இது எப்படி நிகழ்கிறது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்…

Published in: on ஜனவரி 29, 2011 at 6:28 முப  Comments (2)  

காசி.. ஒரு அனுபவம்… 3

கங்கா ஸ்தானம் ஆயிற்று. படகோட்டி தம்பி எங்களைப்பார்த்து கையசைத்தான். நாங்கள் நனைந்த உடையுடன் படகில் ஏறி அமர்ந்தோம். கரையின் அக்கரை பனாரஸ்.  ஆம் பட்டுக்கு பெயர்போன பனாரஸ்ஸேதான். அது நாகரீக நகரம் என்று என்று என் நண்பன் கூறினான். மீண்டும் கங்கை நதியில் படகில். இம்முறை கூட்டமாய் வெண்பறவைகள் (பெயர் தெரிய வில்லை…) எங்கள் படகை சூழ்ந்து கொண்டன. படகோட்டி நண்பன் அவைகளுக்காக உணவை வீசியெறிந்து விட்டு எங்களையும் அவைகளுக்கு உணவளிக்குமாறு கூறி சில (மிக்ஸர் போன்ற) பொட்டலங்களை எங்களுக்கு அளித்தான் (பொட்டலம் ரூ.5). நாங்கள் வீசியதைத்தொடர்ந்து ஒரு பறவைப்படையே நாங்கள் பயப்படும் அளவிற்க்கு எங்களை முற்றுகையிட்டது. நகராப்படகு. நாங்கள் வீசியெறிந்த உணவை  வெண்பறவைகள் சத்தமிட்டபடி பாய்ந்து பிடித்தன. அவைகளுடைய இரைச்சல் இசையாய் என் காதுகளில்.  அந்த சூழல் என்னை என்னுடைய குழந்தைபருவத்திற்கே அழத்துச்சென்றது.  பறவைகளை பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.

மீண்டும் படித்துறையில். நானும் என் நண்பனும் மட்டும் தனியே படித்துறையில் நடந்துசென்றோம். படித்துறையின் சில இடங்களில் அகோரிகளை காணமுடிந்தது. ஒரு அகோரி அருகில் சென்று அமர்ந்தேன்.  என் நண்பனும் அமர்ந்தான்.  எங்களின் வருகையையோ நாங்கள் அவர் அருகில் அமர்ந்ததையோ பொருட்படுத்தாமல் கங்கையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். உலகே மாயம்.. வாழ்வே மாயம்..  நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.. வாயில் ஒரு புகைவாங்கி/போக்கி. உள்ளே நிச்சமாய் கஞ்சா போன்ற வஸ்து(?) இருக்கும் என்று என் நண்பன் சொன்னான். நான் அதை பரிசோதிக்க விரும்பாமல் எழுந்து நடையைக்கட்டினேன்.

அந்த படித்துறையிலும் வருங்கால சச்சின்களும்  டோனிக்களும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருநதார்கள்.  அதற்க்கு சற்று தள்ளி ஒரு காதல் ஜோடி விளையாடிக்கொண்டிருந்தது. மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை என்றான் என் நண்பன். சாய் குடிக்க படித்துறையின் சந்தில் அமைந்த ஒரு கடையில் ஒதுங்கினோம். அப்போதுதான் அந்த கடையில் சாய்அருந்திவிட்டு சிலர் அங்கே படுக்கைவக்கப்பட்டிருந்த சவத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தனர். நான் புத்தகத்தில் இதுபோல படித்திருக்கிறேன். அதை நேரிலே காணும்போது என்னுற் ஏற்படும் அழுத்தம் என்னை ஏதோ செய்தது.  மண் குடுவையில் உள்ள சாய்யை உறுஞ்சிவிட்டு கண்ணை மூடினேன். நண்பன் என்னை தட்டியெழுப்பி காசியில் அதுவும் தகனம் செய்யும் இடத்தில் சவ வாடை இருக்காது எனவும் காசியில் காகங்களை காணமுடியாது எனவும புதுத்தகவலைத்தந்தான். ஆம் நான் காசியில் இருந்தவரை ஒரு காகத்தைக்கூட பார்க்கவில்லை. மெதுவாக படித்துறையின் மேலேறி காசியின் வீதிகளில் நடந்தோம். இம்முறை எனக்கு பிடித்தமான பூரி மற்றும் சப்ஜி வாங்கியுண்டேன். சப்ஜி என்னை ஒன்றும் செய்யாது என்னும் தைரியத்தில் மீண்டும சப்ஜிக்காக கையேந்தினேன். நண்பன் நேரமின்மையை குறிப்பிடவும் நான் விடுதிக்கு விரைந்தேன். அங்கே எங்களுக்கு இரயில் நிலையம் செல்ல வாகனம் தயாராக இருந்தது. வேகவேகமாய் விடுதியை காலி செய்துவிட்டு கீழிறிங்கி காசியில் என் காலடித்தடத்தை விடுத்து  வாகனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் காசியை விட்டு அகன்று பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்தது. மாலைப்பனிமூட்டத்தில பாலத்தின் மேலிருந்து காசியை பார்த்தேன். படித்துறைகள் மங்கலாக தெரிய தூரத்தில் எரியூட்டப்படும் சிதைகள் தீயசைத்து எனக்கு விடையளித்தன.

நான்  ரசித்த  காசியின் அழகு உங்கள் பார்வைக்கு. கண்டு களியுங்கள் :            http://www.youtube.com/watch?v=u4NOzqeJY-Y

Published in: on ஜனவரி 21, 2011 at 11:28 முப  Comments (2)  

காசி.. ஒரு அனுபவம்… 2

படித்துறையில் இறங்கினோம். படித்துறையே பரவி நீண்டு பனி புகையினுள் எல்லையில்லாமல் எங்கோ சென்றுகொண்டிருந்தது. கதிரவன் மெல்ல சோம்பல்முறித்துக்கொண்டிருக்க இக்கரையில் இருந்து அக்கரைக்கு படகில் செல்ல ஆயத்தமானோம். அக்கரையில்தான் நன்னீர் உளது..  அங்கு குளித்து பாவவிமோசனமடையலாம்(?) என நண்பன் கூறவும் ஆறு  மாதங்களுக்கு முன்னர்தான் இராமேஸ்வரம் சமுத்திரத்தில் என் பாவங்களை களைந்துவிட்டமையால் மிகுதியுள்ள  ஒரு ஆறு மாத பாவங்களை கங்கையில் களைய புறப்பட்டேன். படகோட்டி (சரிதானே?..) இந்தியில் நண்பனுடன் கதைத்துக்கொண்டிருக்க நானோ காசியின் படித்துறை அழகை என் கண்களால் பருகிக்கொண்டிருந்தேன். கங்கையின் வெள்ளப்பெருக்கின்போது இந்த படித்துறைகளின் கீழுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுவிடும் எனவும் அதனாலேயே இங்குள்ள படித்துறைகள் உயரமாக எழுப்பபட்டுள்ளன எனவும் அறிந்துகொண்டேன். படித்துறையை ஒட்டி அழ(ழுக்)கான பல வண்ண கட்டிடங்கள். ஒவ்வொரு படித்துறையும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. படகோட்டி நண்பன் ஒவ்வொரு படித்துறை பகுதிகளின் அருகாமையில் படகினை செலுத்தி அதன் தலவரலாறுகளை விளக்க நான் விளங்கிக்கொண்டேன்(?). ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சிறப்பினைப்பெற்றதாய் இருந்தது. கங்ககைக்கு நிதமும் கங்கா ஆர்த்தி செய்யும் இடம்  வண்ணமயமாய் காட்சியளித்தது (இங்குதான் நான் சொன்ன குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாம்…) அரிச்சந்திரா கட் மற்றும் முருகன் கோவில் இருந்த படித்துறையும் அருகில் சென்று பார்த்தோம். கங்கையின் மடியில் அடி சாய்ந்திருந்த ஒரு ஆலயத்தினையும் கண்டோம். அழகாய் இருந்தது பைசா சாய் கோபுரத்தினைப்போல.

அடுத்து மயான காண்டம். காசிக்கு நான் வந்த நோக்கமே இந்த மாயானத்தை தரிக்கத்தான் என்றால் மிகையாகாது (நன்றி : நான் கடவுள்). ஆடி அடங்கிய வாழ்க்கையின் எச்சங்கள் ஆங்காங்கே ஆவியாகிக்கொண்டிருந்தது. அதிலும ஒரு அழகு. எரியூட்டத்தேவைப்படும் விறகுள் விற்பனைக்கு அங்குள்ள படகுகளில் அழகாய் அடுக்கிவைக்கப்பட்டு மிதந்துகொண்டிருந்தன. அக்கணப்பொழுதில் எரியும் தீக்கங்குகளில் குறைந்தது நான்கந்துபேர் மோட்சம் அடைந்துகொண்டிருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது நான் கண்டுகொண்டிருப்பது கீழ்தளமென்று. மேல்தளத்தில் இன்னும் பல பேர் தீக்குள் உறங்கிக்கொண்டிருப்பார்கள் எனவும் இன்றும் பல பேர் வரிசைகிராமமாய் தீக்குள் இறங்க ஆயத்தமாய் இருப்பார்கள் எனவும் அறிந்துகொண்டேன். நேரமிருப்பின் அருகில் சென்று காணலாம் என முடிவுசெய்தேன். சிலர் இங்கு வந்து மோட்சமமைய காத்துகொண்டிருக்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னபோது காலையில் நான் படித்துறையில் கால்வைக்கும்போது நிறைய வயோதிகர்கள் படித்துறையில் உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. உடல் பொருள் இங்கே ஆவியாகிக்கொண்டிருந்தது. படகிலிருந்தபடியே கண்மூடி ஒரு நிமிடம் வாழ்க்கையின் உச்சத்தினை காணநினைத்தபோது என் மனைவியின் உருவம் என் கண்முன்னே வந்ததால் தியானத்தை கலைத்துவிட்டு கங்கையின் மறுபுறம் நோக்கினேன்.

படகு மெல்ல அக்கரையை அடைந்தது. படகைவிட்டு இறங்கினோம். பள்ளிக்குக்போகாச்சிறுவர்கள்  சிலர் அழகிய சாவிக்கோர்ப்பான்களை (எப்படி..) விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவற்றைவாங்குவதில் நாட்டமில்லாததால் நான் கங்கையில் நீராட ஆயத்தமானேன். நீராடுவதற்க்கென்றே அமைக்கப்பட்ட தடுப்பின் எல்லையைத்தாண்டாமல் அதற்க்கே உரிய இடத்தில் நின்று வான் தொழுது கங்கையில் மூழ்கினேன். குளிர்ந்த நீர் உடலில்பட்டு உடல் சிலிர்த்து எழுந்தேன். இமயமலையிலிருந்து இப்போதுதான் வந்ததோ என்று நினைக்கவைக்கும் பனிநீர். பேருவகையாய்  கங்கையில் இறங்கும் ஆவலுடன் கரையில் வீற்றிருந்த என் நண்பர்களை பார்த்து மனதிற்க்குள் சிரித்துக்கொண்டேன்.

வருவேன்…

Published in: on ஜனவரி 20, 2011 at 11:46 முப  Comments (7)  

தடாக மலையும்… தாடகை மலையும்…

கிரகம் சுத்திச்சுத்தியடிக்கும் என்பார்கள். எனக்கும் அப்படித்தான் நடந்தது. புத்தக கண்காட்சிக்கு செல்ல ஆசை. ஆனால் அதற்க்கு  ஒதுக்கப்பட்ட நேரம் ஒரு மணிநேரமென்றால் நீங்களாய் இருந்தால் ஒத்துக்கொள்வீர்களா. ஆனால் நான் ஒத்துக்கொண்டேன். சகதர்மினியோடு (தமிழ் சரிதானே?..) ஒரு ஷாப்பிங் போகவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது ‘அப்படியே புக் ஃபேர் போயிட்டு வரலாமா?.’ என்றேன்.  ‘முதல் ஷாப்பிங் போவோம்.. அப்புறம் டைம் இருந்திச்சுன்னா போகலாம்’ என்றாள். ‘இல்ல நாளையோடு புக் ஃபேர் முடியுதாம்.. அதனால ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்.. ’ என்ற என் ஆதங்கத்தை புரிந்தவளாய்.. ‘சரி.. சரி.. ஒரு ஒரு மணி நேரம்னா நானும் வரேன்..’ என்றவளிடம் பதிலேதும் பேசாமல் புறப்பட்டேன். வாங்கியதென்னவோ இரு பொருள்கள் என்றாலும் அதற்க்கே ஒரு மணிநேரமானது. பின் விரைவாக புக் ஃபேர் விரைந்தோம். வண்டியில் அமர்ந்தபடியே புக் ஃபேருக்கான ஒரு திட்டம் வகுத்தேன். நேராக உயிர்மை ஸ்டால்.. அப்புறம் கிழக்கு.. அப்புறம் ஆண்டவன் விட்ட வழி என முடிவுசெய்தேன். என் சகதர்மினியின் (மீண்டும் கேட்கிறேன் என் தமிழ் சரிதானே?…) இலக்கிய ஆர்வத்தினை தூண்டும் விதமாக ‘நீ எந்த மாதிரியான புத்தகங்களை வாங்க விரும்புவாய்? என்றேன் அன்பாக. ‘அது கிடக்கட்டும்..  போனமோ வந்தமோன்னு இருக்கணும்… வீட்டுல சின்னவ அழ ஆரம்பிச்சுட்டா அவ்வளவுதான்..’ என்று என் இலக்கிய ஆர்வத்தில் கல்லெறிந்தாள். புத்தகத்திருவிழா நடக்கும் அரங்க வாயிலை அடைந்தோம்.  பொங்கல் விடுமுறையாதலால் நல்ல கூட்டம். வண்டியை நிறுத்திவிட்டு நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்தோம்.

திக்குத்தெரியாமல் நின்றுகொண்டிருந்த எங்களுக்கு ஒருவர் உதவினார்.  ‘என்ன புத்தகம் வாங்க போறீங்க’ என்றவளுக்கு ‘இன்னும் முடிவு செய்யல’ என்றபடி அவளையும் இழுத்துக்கொண்டு உயிர்மையைநோக்கி ஓடினேன். உள் நுழைய முடியாதபடி கூட்டம். என்னவள் வெளியிலே நிற்க நான் சிரமப்ட்டு உள் நுழைந்து சாருவையும், மனுஷ்ய புத்திரனையும் தேடினேன். அவர்களுடைய நல்ல நேரமோ என்னமோ தெரிய வில்லை அவர்கள் அங்கில்லை. என்னுடைய தேடல் சாருவின் புத்தகங்களில் இருந்து துவங்கியது. தேடினேன்… தேடினேன்… தேகத்தை தேடினேன்… ‘இன்னும் முடியலையா’ இது என் மனைவி. ‘வந்துட்டேன்’ என்று வெறும் கையுடன் திரும்பினேன். அடுத்தது கிழக்கு பதிப்பகம். நிறைய புத்தகங்கள். என் மனைவியும் ஆவலாய் புத்தகங்களை பார்வையிட்டாள். நான் ராகவன் சார் அங்கில்லை என்றதும் வெளியே வந்துவிட்டேன். அதற்க்குள் என் மனைவி மூன்று சமையல் சம்பந்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்துவிட்டு பில் போடுவதற்க்கும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். ‘சரி வாங்க போகலாம்’ என்றாள். எனக்கு அழுகையாக வந்தது. புத்தக கண்காட்சியில் சில பல எழுத்தாளர்களை பார்க்கலாம் பேசலாம் என்று வந்தால் அது நிறைவேறாது போலும என்று என்னை நான் நொந்தபடி என் மனையாளின் பின் நடந்தேன். திடீரென்று ஒரு தரிசனம்.  ஆம் அவரேதான். சாகித்ய அகாதமி விருதுபெற்ற திரு. நாஞ்கில் நாடன் அமைதியாய் தமிழினி ஸ்டாலின் முன் அமர்ந்திருந்தார். முதலில் நான் அவரை பார்த்துவிட்டு கடந்தும் விட்டேன். பின் என்ன தோன்றியதோ என் மனைவியை அழைத்துக்கொண்டு அவரருகே சென்றேன். என்னைப்பார்த்து புன்னகைத்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.   பின் அவருக்கு சாகித்ய அகாதமி விருதினை பெற்றுத்தந்த படைப்பான ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தினை வாங்கி அவரின் கையெழுத்திற்காக அவரிடம் நீட்டினேன். ‘நட்புடன் நாஞ்சில் நாடன்’ என கையொப்பமிட்டு அன்ற தேதியையும் அதில் குறிப்பிட்டார்.  என் மனைவி யார் இவர் என வினவ.. என்னுடைய இலக்கிய அறிவை அவளுக்கு தெரிவிக்கும் விதமாய் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல்..(இரண்டு இலக்கியவாதிகள் பேசும்போது குறுக்கே.. ம்..)  நாஞ்சில் அவர்களைப்பார்த்து ‘ சார் உங்களை திரு. ஜெயமோகன் அவர்களுடைய வலைத்தளத்தின் மூலமாய் அறிந்து கொண்டேன். அவர் உங்களைப்பற்றி நகைச்சுவை கலந்து ‘தடாக மலையடிவார்த்தில் ஒருவர்’ என எழுதியுள்ளதை நான் பலமுறை படித்திருக்கிறேன்’ என்றேன் மிக பெருமிதத்தோடு. நாஞ்சிலார் மெல்ல புன்னகைத்து விட்டு ‘அது தடாக மலையில்லை.. தாடகைமலை..’ என்றார்.

வரும் வழியெல்லாம் என் மனையாள் அடிக்கடி சத்தமாய் சிரித்துக்கொண்டே வந்தாள். ஏனென்று தெரிய வில்லை. வீடு வரை நான் எதுவும் பேசவில்லை.  வீட்டிற்க்கு வந்த உடன் ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தை எடுத்து என் மேசையின் மேல் வைத்தேன். இப்போது நாஞ்சில் நாடனும் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

Published in: on ஜனவரி 18, 2011 at 12:00 பிப  Comments (6)  

காசி.. ஒரு அனுபவம்…

இரயில் வண்டி மெதுவாக முகல்சாராய் இரயில் நிலையத்தை வந்தடைந்தபோது  மாலை மெல்ல இரவின் பிடியில் மெதுவாக தன்னை இழந்துகொண்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கி கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்தேன். ஊசிப்பனி ஊரையே உலுக்கிக்கொண்டிருந்தது. எடுத்துச்சென்ற பனிக்குல்லாயை தலையில் இறுக்கிக்கொண்டு இரயில் நிலையத்தின் வாயிலை சென்றடைந்தேன்.  என்னுடன் வந்தவர்கள் எனக்கு முன்னால் சென்று ஆட்டோ பிடிப்பதற்க்கான ஆயத்தங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார்கள். பனியின் கொடுமையிலிருந்து மீள ஒரு ராஜாவை எடுத்துப்பற்றவைத்தேன். மொழி தெரியாத ஊரில் நான். எல்லாம் இந்தி மயம். எனக்கு இந்தி தெரியாது எவ்வளவு சவுகரியமாக இருந்தது தெரியுமா. இரயில் பெட்டியில் இருந்து இறங்கும்போது ஒருவ(னு)ருடைய காலை மிதித்துவிட்டு வந்தபோது அவ(ன்)ர் என்னை பார்த்து கோபமாக ஏதோ சொல்ல.. நான் பதிலுக்கு சிரித்து வைத்து விட்டு  வந்துவிட்டேன் என்றால் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்களேன். வாழ்க கலைஞர். ஒரு வழியாக ஆட்டோ ஒன்று ஒப்பந்தம் செய்யப்பட்டு நான் முகல்சாராய் இரயில் நிலையத்திலிருந்து காசியை நோக்கி பயணமானேன்.

பனி மூட்டத்தில் எதிரே வந்துகொண்டிருந்த வாகனங்களின் விளக்கொளி கீற்றுகளின் நடுவே எங்கள் ஆட்டோ விரைந்துகொண்டிருந்தது. ஒரு அரை மணிநேர பயணத்தில் காசியின் வீதிகளை கண்டேன். சென்னை சௌகார்பேட்டை நெரிசல் மிகுந்த சந்துபொந்துகளை மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதைவிட சற்றே அகலமான வீதி. மக்கள், வாகனம், இரைச்சல் நிறைந்த புழுதி சாலை எங்களை எங்கோ இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. இறுதியில் நாட்டுக்கோட்டை சத்திரம் வந்தடைந்தோம். பிறகுதான் தெரிந்தது அது நம் தமிழ் முன்னோர்கள் அதுவும் செட்டியார் வகுப்பைச்சேர்ந்தவர்கள் நம்மவர்களுக்காக கட்டி வைத்துள்ள சத்திரம் என்று.  குறைந்த வாடகையில் தரமான உணவுடன் சிறிய சுத்தமான அறைகளை வாடகைக்கு கிடைக்கின்றன என அறிந்து கொண்டேன். சத்திரத்தினுள் மது புகை கண்டிப்பாக அனுமதியில்லை என்ற வாசகம் என்னை அன்புடன் வரவேற்றது. சத்திரத்தில் நுழைவில் காலணிகளை விடுவதற்கென்றே அமைக்கப்பட்ட பிரத்தேயகமான இடத்தில்  காலணிகளை வைத்துவிட்டு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் போய் சற்று ஓய்வெடுத்துக்கொண்டேன்.

சிறிது நேர ஓய்வுக்குப்பின் காசி விஸ்வநாதரைப்பார்க்க ஆயத்தமானோம். நல்ல இரவு. இரவின் ஒளியில் காசி மிளிர்ந்தது. விவரம் தெரிந்த நண்பன் முன்னால் வழிகாட்ட காசி விஸ்வநாதரை தரிசிக்க நடந்து முன்னேறினேன். வீதி ரங்கநாதன் தெருவை நினைவூட்டியது. ஆலயத்தின் நுழைவில் ஏதோ நான் பாகிஸ்தானில் இருந்து வந்ததவன் போல என்னை ஆய்ந்தார்கள் அக47 வைத்திருந்த காவலர்கள் . பின்னர்தான் தெரிந்தது நான் விஜயம் செய்த நாளிலிருந்து இரண்டுவாரங்களுக்கு முன்னர்தான்  காசியின் படிததுறையில் குண்டு வெடித்தது என. ஆய்வுக்குப்பின் கோவிலின் உள் நுழைந்தேன். என் கற்பனைகளை சிதறடிக்கும் வண்ணம் உள்ளே காசி விஸ்வநாதர் பிரகாரம் மிக எளிமையாய் இருந்தது. சிறிய லிங்க ரூபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அன்று நடைபெற்ற கடைசி பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் முடிந்தபின் மீண்டும் காசியின் வீதிகளில் நடந்தேன். இரவின் மடியில் காசி மெல்ல தன் கண்களை மூடுகின்ற வேளை. கடைகளெல்லாம் அடைக்கப்பட்டிருந்த வீதியில் மனித நடமாட்டங்கள் குறைந்திருந்தது.சில சாய் கடைகள் மட்டும் எங்களுக்காகவே திறந்திருந்தது போல எனக்குத்தோன்றியது.  சாயாவை அருந்தியபடி நோட்டமிட்டேன். சாலையின் இரு மருங்குகளை குப்பைகள் அலங்கரித்திருந்தன. நாய்களுக்கும் பஞ்சமில்லை.  நாளை காலையில் சீக்கிரமே கங்கையை தரிசிக்க வேண்டும் என நண்பன் சொன்னதால் வேகமாய் நடந்து சென்று அறைக்குள் முடங்கி வேகமாய் உறங்கியும் போனேன்.

 மறுநாள். காலையின் ஒளியில் காசியை தரிசித்தேன். சாய் அருந்தி விட்டு அதிகாலை 7 மணிக்கு(?) இறங்கி வீதியில் நடந்தோம். காலை கடைகள் களைகட்ட துவங்கியிருந்தன. நாஞ்சில் நாடனின் விருப்பமான கடுகு எண்ணைப்பூரி தயாராகிக்கொண்டிருந்தது. காய்கறிகள் வரத்து  ஆரம்பித்திருந்தது. கத்திரிக்காய் மிகப்பெரியதாய் இருந்தது நம்மூர் கத்திரிக்காய் நான்கந்தை ஒன்றாய் உருட்டி வைத்ததுபோல. மற்றவை எல்லாம் நம்மூரிலேயே கிடைப்பனதான் என்றாலும் அவைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள அழகை(?) காண எனக்கு ஒரு அவா. நான் கத்திரிக்காய் குவியலை ஆவலோடு பார்ப்பதையே சிலர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததால் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். கங்கை ஆர்பரித்தோடும் அழகைக்காண நண்பர்களின் பின்னால் நானும் ஓடினேன். வேகவேகமாய் படித்துறையில் இறங்கும் போது கங்கையை தரிசித்தேன். காலைக்கதிரவன் கங்கையின் மேல் நர்ததனமிட்டுக்கொண்டிருந்தான். நான் படிகளில் மெதுவாக இறங்கினேன். கங்கை ஆர்பரிப்பில்லாமல் அமைதியாய் நகர்ந்து கொண்டிருந்தது.

வருவேன்…

Published in: on ஜனவரி 14, 2011 at 10:28 முப  Comments (6)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...